தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் சவாமிக்கு திருக்கல்யாணம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மே 2015 11:05
தூத்துக்குடி : தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயில் வைகாசி பெருந்திருவிழால் நேற்று காலை சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. தூத்துக்குடியில் பழமை வாய்ந்த வைகுண்டபதி பெருமாள் கோயில் உள்ளது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வைகுண்டபதி பெருமாள் எழுந்தருளியுள்ளார். இந்தக்கோயில் வைகாசி பெருந்திருவிழா மே 22 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. . 11 நாட்கள் திருவிழாவில் தினமும் காலை தோளுக்கினியானில் வீதியுலாவும், மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலாவும் நடக்கவுள்ளது. நேற்று காலை 11.30மணிக்கு வைகுண்டபதி பெருமாளுக்கும் ஸ்ரீதேவி, பூதேவிக்கும் திருக்கல்யாணம் நடந்தது. பின் பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலி கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது. அதன் பின் இரவு 9 மணிக்கு சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். மே 30 ல் காலை 10 மணிக்கு திருத்தேரில் பெருமாள் எழுந்தருளுகிறார். பக்தர்கள் வடம் பிடிக்க ரத வீதிகளில் உலா வருகிறது. மே 31 ல் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், ஜூன் 1ல் இரவு 9 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடக்கவுள்ளது.