பதிவு செய்த நாள்
28
மே
2015
11:05
பவானி: பவானியில் சிருங்கேரி சங்கர மடத்தின் சார்பில், உலக நன்மைக்காகவும், மடத்தின் திருப்பணிக்காகவும், ஸ்ரீசண்டி ஹோமம் நடந்தது. பவானி, கூடுதுறை ரோட்டில் உள்ள சிருங்கேரி சங்கர மடத்தின் சார்பில், ஸ்ரீசண்டி ஹோமம், கடந்த, 26ம் தேதி அதிகாலை, 5 மணிக்கு கணபதி ஹோமம், நவகிரக ஹோமத்துடன் துவங்கியது. மாலை, 5 மணிக்கு வேதபாராயணம், ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம், ஸ்ரீதேவி மகாத்மியம் பாராயணம், மஹா தீபாராதனை நடந்தது. நேற்று காலை, 7 மணிக்கு ஸ்ரீசண்டி ஹோமம், மஹா பூர்ணாஷுதி, மஹா தீபாராதனை நடந்தது. கோபி பாஸ்கர சாஸ்திரி, கணேச சாஸ்திரி ஆகியோர் தலைமையிலான குழுவினர், ஹோமத்தை நடத்தினர். மடத்தின் தர்ம அதிகாரி வெங்கட்ராமன், மூத்த அதிகாரி ராமநாதசாஸ்திரி, பிராமணர் சங்க மகளிரணி தலைவி விஜயராகவன், மாநில செயலாளர் ஜெயபிரகாஷ், விஜயராகவன், குரு (எ) பத்மநாபன் உட்பட பலர் பங்கேற்றனர்.