ஆதிநாதர் கோயிலில் நவ திருப்பதி பெருமாள்களின் கருட சேவை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மே 2015 04:05
தூத்துக்குடி: ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் கோயிலில் வைகாசி அவதார திருவிழாவை முன்னிட்டு நேற்று (மே 27) இரவில் நவ திருப்பதி பெருமாள்களின் கருட சேவை நிகழ்ச்சி நடந்தது. ஆதி நாதர்கோயிலில் மே 21ல் தேங்காய்சாற்றுதல், 22 ல் தங்கதோளுக்கினியான் வாகனத்தில் ஸ்ரீமதுரகவியாழ்வார் வீதியுலா நடந்தது. மே 23ல் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. விழாநாளில் இரவில் சுவாமிநம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று இரவு 10 மணிக்கு நவ திருப்பதி கோயில்களில் உள்ள ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் எம்இடர்கடிவான், திருப்புளியங்குடி காய்சினிவேந்தன், பெருங்குளம் மாயக்கூத்தன்,தொலைவில்லிமங்கலம் செந்தாமரைக்கண்ணன், இரட்டை திருப்பதி தேவர்பிரான், தென்திருப்பேரை ஸ்ரீநிகரில் முகில்வண்ணன், திருக்கோளூர் வைத்தமாநதி ஆழ்வார் திரு நகரி பொலிந்து நின்றபிரான், ஆகியோர் குடவரவாசலில் கருட வாகனத்தில் எழுந்தருளினர். 7 ம் நாள் சந்திரப்பிரபை வாகனத்திலும், 8ம் நாள் தங்க குதிரை வாகனத்திலும்,9 ம் நாள் தங்கப் பல்லக்கிலும், 10 ம் நாள் வெட்டி வேர் சப்பரத்திலும் சுவாமி வீதியுலா வருகிறார். 9ம் நாள் மே 31 ல் நம்மாழ்வார் திருத்தேரில் எழுந்தருளுகிறார். 8 மணிக்கு தேரோட்டம் நடக்கவுள்ளது.