ஸ்ரீ பாத்தசாரதி பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மே 2015 04:05
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருபாரத்தன்பள்ளியில் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள், ஸ்ரீ கோல வில்லிராமர் கோயில் உள்ளது.1,000 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.
திருமங்கையாழ்வார் மங்கலா சாசனம் செய்த தலமாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலின் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. கு ம்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 23ம் தேதி தொடங்கி 6நாட்கள் 11கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
இன்று கா லை பூர்னாஹூதி மற்றும் மகாதீபாராதனையுடன் யாக சாலை பூஜைகள் முடிந்து. 6.30 மணிக்கு மங்கள வாத்தியம் முழங்க கடங்கள் புறப்பட்டு சன்னதி விமானங்களை அடைந்தது.தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க கோயில் பரம்பரை ஆதின ம், ஸ்தானிக ட்ரஸ்டி தலைமையில் பட்டாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதில் சீர் காழி எம்.எல்.எ.சக்தி உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை ஸ்ரீ தாமரையாள் கேள்வன் திருப்ப ணி கைங்கர்ய சபாவினர் செய்திருந்தனர். இரவு பெருமாள் கருடசேவை வீதி புறப்பாடு நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி திருவென்காடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.