பதிவு செய்த நாள்
30
மே
2015
11:05
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கனக துர்க்கை அம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் அடுத்த, கோனேரிக்குப்பம் பகுதியில், பிரசித்தி பெற்ற கனக துர்க்ககை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் கடந்த நிலையில், பக்தர்கள் குழு சார்பில் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானித்து திருப்பணிகள் நடந்து முடிந்தன. அதன்படி, செவ்வாய்க்கிழமை மாலை வாஸ்து சாந்தியும், புதன்கிழமை கணபதி ஹோமமும், மாலையில் கும்ப அலங்காரமும் நடைபெற்றது.
29.5.15 காலை பூர்ணாஹுதி நிறைவடைந்து, காலை 8:30 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர் சன்னதிக்கும், மூலவர் விமான கலசத்திற்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 10:00 மணியளவில் மூலவருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் அம்பாளை தரிசனம் செய்தனர். மாலை 3:00 மணியளவில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது.