பதிவு செய்த நாள்
30
மே
2015
11:05
பல்லடம்: பல்லடம் கரைப்புதூர் அல்லாளபுரம் பூமிதேவி, நீளாதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், நேற்று நடைபெற்றது.கடந்த, 25ல், விக்னேஸ்வர ஆராதனம், பஞ்சகவ்யம், சுதர்சன யோகம் ஆகியவற்றுடன், கும்பாபிஷேக பூஜைகள் துவங்கின. 26ம் தேதி காலை, 10:00 மணிக்கு, ஸ்ரீஉலகேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம், முளைப்பாரி எடுத்து வரப்பட்டது. மாலையில், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, தீர்த்த சங்கராகர ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன
கடந்த, 27ல் கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், சேவகால துவக்கம், முதற்கால ஹோமம் ஆகியன நடந்தன. நேற்று முன்தினம் வரை, பல்வேறு கால பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை, 5:00 மணிக்கு நான்காம் கால ஹோமம், மகாபூர்ணாஹூதி, யாத்ரா தானம், கடங்கள் புறப்பாடு நடந்தன.
காலை, 7:15 மணியளவில், கோவில் கோபுரங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பல்லடம் சுற்றுப்பகுதி பக்தர்கள் பங்கேற்றனர். கரியகாளியம்மன் கோவிலில், பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.