உடுமலை: உடுமலை சின்னபொம்மன் சாளை மாரியம்மன் கோவில் விழாவையொட்டி, பக்தர்கள் பூவோடு எடுத்தனர்.உடுமலை சின்னபொம்மன் சாளையில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறுகிறது. இந்தாண்டு திருவிழா, 19ல், நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த, 21ல் தெய்வகுளம் காளியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. 26ல், கம்பம் போடும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றன.
நேற்று அம்மன் திருவீதியுலா நடந்தது. இன்று மஞ்சள் நீராட்டுடன், திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் செய்திருந்தனர்.