பதிவு செய்த நாள்
30
மே
2015
12:05
திருத்தணி: ஷீரடி சாய்பாபா கோவில் முதலாண்டு நிறைவு விழா, 30.5.15ல் துவங்கி, ஜூன் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.
திருத்தணி ஒன்றியம், தலையாறிதாங்கல் கிராமத்தில், ஷீரடி சாய்பாபா கோவில், மகா கும்பாபிஷேகம், கடந்த ஆண்டு மே 30ம் தேதி, நடந்தது. கோவில் ஆரம்பித்து, ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு, இன்று முதல் (30ம் தேதி), தொடர்ந்து மூன்று நாட்களுக்கு சிறப்பு ஹோமம், பூஜைகள் மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. முதல் நாளான, இன்று கோவில் வளாகத்தில், ஐந்து யாக சாலைகள், 108 கலசங்கள் அமைத்து, சிறப்பு ஹோமம், காலை 6:00 மணி, காகட ஆரத்தி, அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்படுகிறது.
31.5.15 108 கலச யாத்திரை, கலச பூஜை மற்றும் ஸ்தாபனம் நடைபெறுகிறது. காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை, பக்த ஸ்வர பஜன மண்டலியின் பக்தி இன்னிசை கச்சேரியும், மாலை 6:00 மணி முதல், இரவு 10:00 மணி வரை, கின்னஸ் சாதனை படைத்த எஸ்.எஸ்.எஸ். சரவணனின், பக்தி இன்னிசையும் நடைபெறுகிறது. வரும் 1ம் தேதி காலை 6:00 மணிக்கு, காகட ஆரத்தி, காலை 8:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பூர்ணாஹூதி மற்றும் அன்னதானம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அறங்காவலர் குழுத் தலைவர் கோதண்டன் மற்றும் தலையாறிதாங்கல் கிராமவாசிகள் செய்து வருகின்றனர்.