விக்கிரவாண்டி: அய்யூர் அகரம் முத்தால் வாழியம்மன் கோவிலில், செடல் உற்சவ விழா நடந்தது.
அய்யூர் அகரம் முத்தால் வாழியம்மன் கோவில் செடல் உற்சவ திருவிழாவைமுன்னிட்டு,அம்ம னுக்கு காலையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம் 2:00 மணியளவில், தேரில் அம்மன், விநாயகர் சிறப்புஅலங்காரத்தில்மாடவீதி வழியாக சுவாமி ஊர் வலம் நடந்தது. பக்தர்கள் நேர்த்திக்கடனைநிறைவேற்றும் வகையில்,அம்மனுக்கு செடல் குத்தி சிறிய தேர்களை இழுத்தும், பறவை காவடியும் எடுத்தனர்.
விழா ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் குமாரராஜா மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.