பதிவு செய்த நாள்
30
மே
2015
12:05
விழுப்புரம்: அத்தியூர்திருவாதி முத்துமாரியம்மன் கோவிலில் செடல் உற்சவ திருவிழா
நடந்தது.
விழுப்புரம் அடுத்த அத்தியூர்திருவாதி கிராமத்தில், முத்துமாரியம்மன் கோவிலில் செடல் உற்சவ திருவிழா, கடந்த 21ம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து ஒன்பது நாள் நடந்த விழாவில், இரவில் பல்வேறு அலங்காரங்களில், அம்மன் வீதியுலா நடந்தது.
நேற்று செடல் திருவிழாவையொட்டி, மதியம் கோவில் வளாகத்தில் அலகு குத்துதல், நேர்த்திக்கடன் உள்ள குழந்தைகள் தேர்பாடை இழுத்தல் மற்றும் காத்தவராயன், முத்து மாரியம்மன், வீரன் சுவாமிகளின்வீதியுலாவும் நடந்தது. தொடர்ந்து மாலை 4:00 மணிக்கு, கோவிலின் முன், செடல் மரத்தில்ஆடு கட்டி, செடல் உற்சவ விழா நடந்தது. விழா ஏற்பாடுகளை கோலியனூர் ஒன்றிய முன்னாள் சேர்மன் புகழேந்தி, நாட்டாண்மை கலியபெருமாள், தர்ம கர்த்தா கலியபெருமாள், ஊராட்சி தலைவர் கணே
சன், முன்னாள் ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, உபயதாரர் ஆறுமுகம் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.