பதிவு செய்த நாள்
30
மே
2015
12:05
அனுப்பர்பாளையம்: பிச்சம்பாளையம் பாலசஞ்சீவி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், 29.5.15விமரி சையாக நடைபெற்றது.
திருப்பூர், பிச்சம்பாளையம் புதூரில் அமைந்துள்ள பாலசஞ்சீவி விநாயகர், அஷ்டாபுஜ துர்கா பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம், மவுன சிவாச்சல அடிகள் தலைமையில், நடைபெற்றது; நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
காலை, 9:00 மணிக்கு மேல், சிறப்பு அபிஷேகம், நிவேத்தியம், தீபாராதனை, தச தரிசனம், பொது தரிசனம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று முதல், வரும், 16வரை, மண்டலாபிஷேக பூஜை நடைபெறும். விழா ஏற்பாடுகளை,திருப்பணி குழுவினர் மற்றும்
ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.