பழநி: வைகாசி விசாகத்தை முன்னிட்டு பழநிகோயிலில் குவிந்த பக்தர்கள் வின்ச் -ல் 2மணிநேரம் காத்திருந்து மலைக்கோயிலுக்கு சென்றனர். வைகாசி விசாகத்தை முன்னிட்டு பழநி மலைக்கோயில் சன்னதி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. வெளிமாவட்டம், உள்ளுர் பக்தர்கள், காவடிகள் எடுத்தும் நேர்த்திகடன் செலுத்தினர். இதைப்போல பழநி டவுன் விஸ்வபிராமண மகாஜன சங்கம் சார்பில் வைகாசி விசாக திருவிழா நடைபெறும் பெரியநாயகியம்மன் கோயிலிருந்து ஏராளமான பக்தர்கள் பால் குடங்கள் எடுத்து நகர முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து திருஆவினன்குடிகோயிலில் வழியாக பழநி மலைக்கோயிலுக்கு சென்று ஞானதண்டாயுதபாணிக்கும் அபிஷேகம் செய்தனர். வெளியூர்களை சேர்ந்த பக்தர்களும் பால்குடங்கள் எடுத்துவந்து நேர்த்திகடன் செலுத்தினர். ரோப்கார் இயங்காத காரணத்தால் வின்ச் ஸ்டேஷன் 2 மணிநேரம் காத்திருந்து மலைக்கோயில் சென்றனர். இலவச தரிசன வழியில் 2 மணிநேரம் வரை காத்திருந்து மூலவர் ஞான தண்டாயுதபாணி சுவாமி தரிசனம் செய்தனர்.