பதிவு செய்த நாள்
29
ஜூன்
2015
10:06
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முந்தைய, பழமையான மகாவீரர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. உளுந்தூர்பேட்டை தாலுகா, பாதூரில் ஸ்ரீப்ரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு, பின் பகுதியில், விவசாயி ராயர் என்பவர், பைப் லைன் அமைக்க பள்ளம் தோண்டியபோது, பழமை வாய்ந்த சிலை கிடைத்தது. அந்த சிலை சமண மதத்தை சேர்ந்த, 24 தீர்த்த ங்கர்களின் கடைசி தீர்த்தங்கரரான மகாவீரர் சிலையாகும். ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முந்தைய, கி.பி., 8ம் நுõற்றாண்டில், பல்லவர் காலத்தைச் சேர்ந்த, இக்கற்சிலை, 5 அடி உயரமும், 3 அடி அகலமும் உள்ளது. மகாவீரர் தியானத்தில் இருப்பது போன்ற, இச்சிலையை ஜெயினர்கள் பலர் ÷நரில் சென்று பார்த்தனர். இந்நிலையில் அச்சிலையை அமைக்க கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்தனர். அதன் முதற்கட்டமாக மகாவீரர் சி லையை, பாதூர் அம்மன் கோவில் அருகே கொண்டு சென்று, ஸ்தபானம்செய்யப்பட்டது. அப்போது மகாவீரர் சிலைக்கு பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஜெயினர்களும் அப்பகுதி மக்களும் கலந்து கொண்டு வழிபட்டனர். பழமை வாய்ந்த மகாவீரர் சிலையை நிறுவி, கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.