நாகப்பட்டினம்: நாகை அடுத்த நாகூர் நாகநாதசுவாமி கோவில் தேரோட்டத்தை கலெக்டர் பழனிசாமி வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார்.தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மூர்த்தி,தலம்,தீர்த்தம் மூன்றாலும் சிறப்புற்று விளங்கும் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது நாகை அடுத்த நாகூர் நாகவல்லி அம்பாள் சமேத நாகநாதசுவாமி கோவில்.ராகு,கேது தோஷ பரிகார தலம்.இக்கோவிலில் ஆண்டு தோறும் பிரமோத்சவ விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு பிரமோத்சவ விழா,கடந்த 18 ம் தேதி,அய்யனார் அபிஷேகத்துடன் துவங்கி நடந்து வருகிறது.முக்கிய நிகழ்ச்சியாக நேற்று நடந்த தேரோட்டத்தை கலெக்டர் பழனிசாமி வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு நாகை வட்ட பள்ளிகளுக்கு மட்டும் நேற்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.