பதிவு செய்த நாள்
02
ஜூலை
2015
02:07
காரைக்கால்: காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவில் இறைவனுக்கு அம்மையார் அமுதுபடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. காரைக்கால் அம்மையாரின் வாழ்கை வரலாற்றை நினைவுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி விழா நடத்தப்படுகிறது.
அதன்படி கடந்த 29ம் தேதி மாப்பிள்ளை அழைப்பும், 30ம் தேதி பரமதத்தர் காரைக்கால் அம்மையார் திருகல்யாணம் நடந்தது. நேற்று சிவபெருமான் அடியார் வேடத்தில் காவி உடை, ருத்ராட்சம் அணிந்து வீதி உலா நடந்தது. அப்போது, பக்தர்கள் அர்ச்சனை செய்து மாங்கனிகளை இறைத்தனர். அதைத்தொடர்ந்து, வீதி உலா வரும் பிச்சாண்டவரை காரைக்கால் அம்மையார் எதிர் சென்று அழைத்து அமுது படைக்கு இனிப்பு, பழங்கள் என பல்வேறு உணவுடன் இரவு இறைவனுக்கு அமுது படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் நாஜிம் எம்.எல்.ஏ.,புதுச்சேரி காங்.,கட்சி தலைவர் சுப்ரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ.,வி.கே.,கணபதி, வாரியத்தலைவர்கள் கோவிந்தராஜ், உதயகுமார், சுரேஷ் மற்றும் கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், தனி அதிகாரி ஆசைத்தம்பி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.