சிவபெருமானை முழுமுதற்கடவுளாகப் போற்றுபவை பன்னிருதிருமுறைகள். இவை சிவனடியார்களால் பாடப்பட்டவை. இப்பாடல்களில் ஐந்து நுõல்களை மட்டும் பஞ்சபுராணம் என்று போற்றுவது மரபு. கோயில்களில் சிவபெருமானுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெறும் போது பன்னிரு திருமுறைகளைப் பாட பொறுமையோ, நேரமோ, மனமோ இல்லாமல் இருந்தால் பஞ்சபுராணத்தையாவது அவசியம் ஓதுவார்கள் ஓதவேண்டும் என்ற விதியை பெரியவர்கள் ஏற்படுத்தினர். தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் ஆகிய ஐந்து நுõல்களில் இருந்து ஒவ்வொரு பாடலைத் தேர்ந்தெடுத்துப் பாடுவதே பஞ்சபுராணம் ஓதுதல் ஆகும். ஐந்தெழுத்து மந்திர நாயகனான சிவனை பஞ்சபுராணம் என்னும் அஞ்சுபாடல் பாடி வழிபட்டால் கஷ்டங்கள் பஞ்சாய் பறந்திடும் எளிதாக அருள் பெறலாம் என்பர்.