பதிவு செய்த நாள்
03
ஜூலை
2015
04:07
ராமகிருஷ்ண விஜயம் இரண்டாவது வருடமாகச் சிறுகதைப் போட்டியை நடத்துகிறது. சிறந்த சிந்தனைகள் எவ்வாறெல்லாம் செயல் வடிவம் பெறுகின்றன என்பதைக் காட்டும் விதத்தில், நமது பாரம்பரியம், தியாகம், நன்மையின் சக்தியில் நம்பிக்கை, தைரியம், கருணை, குடும்ப உறவுகளின் சரியான புரிதல், தெய்வ பக்தி, தேசபக்தி போன்ற சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள் மீதான சிறுகதைகள் வரவேற்கப்படுகிறது. எழுத்தாளர்கள் அனைவரும் இதில் பங்கேற்கலாம். எந்த வயதினரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
சிறுகதைகளை அனுப்பும்போது கவனிக்க வேண்டியவை:
* வெள்ளைத் தாளில் ஒரு பக்கத்தில் மட்டுமே எழுத வேண்டும்.
* ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் மூன்று பக்கங்களுக்குள் சிறுகதைகள் இருக்க வேண்டும்.
* இணைய தளத்தில் ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டவற்றை ஏற்க இயலாது.
* தேர்வாகாத கதைகளைத் திருப்பி அனுப்ப இயலாது.
* போட்டிக்கு அனுப்பப்பட்ட கதை முடிவு தெரியும் வரை வேறெந்தப் பத்திரிகைக்கும் அனுப்பப்படவில்லை என்ற உத்தரவாதம் தரப்பட வேண்டும்.
* மின்னஞ்சலில் கதை அனுப்புபவர்கள், ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் சிறுகதைப் போட்டி என்று குறிப்பிட்டு rv@chennaimath.org என்றமுகவரிக்கு US unicode எழுத்துருவில் அனுப்பவும்.
* கதைகளைப் பரிசீலிக்கும் நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
* போட்டி முடிவுகள் செப்டம்பர் 2015 ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் வெளியிடப்படும்.
* முடிவு வெளியாகும் வரை கடிதம், தொலைபேசி, இ-மெயில் விசாரிப்புகளைத் தவிர்க்கவும்.
ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்,31, ஸ்ரீராமகிருஷ்ண மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை-4. கட : 2462 1110 உதுtண : 211mail: srv@chennaimath.org
கதைகளை அனுப்பகடைசித் தேதி : 25.7.2015
தேர்ந்தெடுக்கப்பட்டகதைகளுக்கான பரிசளிப்பு விழாசுவாமி விவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றிய தினமான செப். 11அன்று நடைபெறும்.
முதல் பரிசு ரூ.10,000/-
இரண்டாம் பரிசுரூ. 8,000/-
மூன்றாம் பரிசு ரூ. 6,000/-