பதிவு செய்த நாள்
04
ஜூலை
2015
11:07
எளிதாக உணர்ச்சி வசப்படும் தன்மை ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. இது மனிதனை நேர்வழியில் செல்லவிடாமல் தடுக்கிறது. தீமையை நல்லதாக அவனது கண்களுக்கு காட்டுகிறது. இதிலிருந்து மனிதன் விடுபட வேண்டும்.
“ஆத்மாவின் மீதும் அதனை (மனிதனாக) உருவாக்கியவன் மீதும், அதன் நன்மை தீமைகளை அதற்கு அறிவித்தவன் மீதும், சத்தியமாக, எவன் (பாவங்களை விட்டும்) தன்னை பரிசுத்தமாக்கிக் கொண்டானோ, அவன் நிச்சயமாக சித்தியடைந்து விட்டான். எவன் அதனை (பாபத்தில்) புதைத்து விட்டானோ, அவன் நிச்சயமாக நஷ்டமடைந்து விட்டான்,” என்கிறது குர்ஆன்.
அல்லாஹ்வின் இந்த அறிவிப்பை மனதில் கொண்டு, மனிதன் தன்னுடைய பண்புகளை முழுமையாக நல்லதாக மாற்றிக் கொள்ள வேண்டும். ஒருவேளை, மனிதன் தன்னை மாற்றிக் கொள்ளாவிட்டால் என்னாகும் என்பதற்கும் குர்ஆனில் பதில் இருக்கிறது.
“நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகான வடிவில் படைத்திருக்கின்றோம். (அவனுடைய துர் நடத்தையின் காரணமாக) பின்னர் அவனைத் தாழ்ந்தோனினும், தாழ்ந்தவன் ஆக்கி விடுகின்றோம். ஆயினும், எவர்கள் விசுவாசங்கொண்டு நற்கருமங்களை செய்து விடுகின்றார்களோ அவர்களைத் தவிர, அவர்களுக்கு தடைபடாத நற்கூலி உண்டு” என்கிறது ஒரு வசனம்.
இறைவன் மீது விசுவாசம் கொண்டு நல்ல செயல்களைச் செய்ய வேண்டும் என்ற சிந்தனை, இந்த நோன்பு காலத்தில் மனதில் உருவாகட்டும்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.49 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.19 மணி