பதிவு செய்த நாள்
04
ஜூலை
2015
11:07
கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகேயுள்ள துருசுப்பட்டி
கிராமத்தில் அய்யனார் கோவிலில் இருந்த வினாயகர், திரௌபதியம்மன், அய்யனார்,
சுப்பிரமணியர், கருப்பர், மதுரைவீரன், காளியம்மன், ஆஞ்சநேயர், முத்தாள்ராவுத்தர் சன்னதிகள்
புதுப்பித்து கட்டும் பணி முடிந்து, கும்பாபிஷேகம் நடந்தது.
இதை முன்னிட்டு தெய்வ அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை, புண்யாகவஜனம், வாஸ்துசாந்தி,
அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், கும்பஅலங்காரம், முதல்கால ஹோமம் உள்ளிட்ட பல்வேறு
ஹோம பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம், கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது.