பதிவு செய்த நாள்
04
ஜூலை
2015
05:07
கோவை: கோவை தடாகம் சாலையில் உள்ள சிவகுரு மகாசேத்ரம் கோவிலின் மகா கும்பாபிஷேக விழா, கடந்த, 2ம் தேதி கோலாகலமாக துவங்கியது.
முதல் நாளில், சிறப்பு தீபாராதணைகளுடன் மூன்று வேளையும் பூஜை நடந்தது. இரண்டாம் நாளான நேற்று முன்தினம் காலை, கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், பஞ்ச கவ்ய பூஜை செய்யப்பட்டு, சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 3.7.15 காலை மகா கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது, கோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, உச்சி கால பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில், நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு கடவுள் அருள் பெற்றனர்.