பதிவு செய்த நாள்
06
ஜூலை
2015
10:07
விருத்தாசலம்: சங்கடஹர சதுர்த்தியொட்டி, விருத்தாசலம் கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள ஆழத்து விநாயகருக்கு நேற்று காலை பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அரு கம்புல், மலர் மாலைகள் சாற்றி மகா தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ஆழத்து விநாயகர் அருள்பாலித்தார். மணவாளநல்லுõர் கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில், சித்தி விநாயகர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. மாலை வெள்ளிக் கவசத்தில் சுவாமி அருள்பாலித்தார். ஆற்றங்கரை சித்தி விநாயகர், காந்தி நகர் நர்த்தன விநாயகர், அய்யனார் கோவில் தெரு வழித்துணை விநாயகர், ரயில்வே குடியிருப்பு விநாயகர், கடலுõர் ரோடு விஜய விநாயகர், பெரியார் நகர் வினை தீர்த்த சக்தி விநாயகர், செல்வ விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.