புதுச்சேரி திரவுபதியம்மன் கோவிலில் 10ம் தேதி தீமிதி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூலை 2015 10:07
புதுச்சேரி:லாஸ்பேட்டை திரவுபதியம்மன் கோவில் தீமிதி விழா வரும் 10ம் தேதி நடக்கிறது. லாஸ்பேட்டை திரவுபதியம்மன் கோவிலில் உள்ள பழமை வாய்ந்த தேர், மூஷிபா வாகனம், இரண்டு சகடைகள் 25 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது. இவை நேற்று வெள்ளோட்டம் விடும் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு அபிேஷக ஆராதனைகளுக்கு பிறகு திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து தேர் புறப்பட்டது. சுப்ரமணிய கோவில் வீதி, சீனிவாசன தெரு, மெயின் ரோடு வழியாக மீண்டும் கோவில் வளாகத்தை அடைந்தது. முதல்வர் ரங்கசாமி, அறங்காவலர் வாரிய தலைவர் ராமதாஸ், துணைத் தலைவர் வீரபத்திரன், செயலாளர் செல்வகணபதி, பொருளாளர் நேத்தாஜி, உறுப்பினர் கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.தீமிதி விழா:திரவுபதியம்மன் கோவில் தீமிதி விழா கடந்த மாதம் 21 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தீமிதி விழா வரும் 10ம் தேதி மாலை 6 மணியளவில் நடக்கிறது.