பதிவு செய்த நாள்
06
ஜூலை
2015
10:07
விருத்தாசலம்: குரு பெயர்ச்சியொட்டி, விருத்தாசலம் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவான், நேற்று இரவு 11:02 மணிக்கு கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பிரவேசித்தார். இதையொட்டி, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் குரு பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 9:00 மணிக்கு உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம், குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பரிகார ராசியினர் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டனர். விருத்தகிரீஸ்வரர் சன்னதியொட்டியுள்ள தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு பால், தயிர், ச ந்தனம், இளநீர், தேன், பன்னீர், திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம், கொண்டக்கடலை, மலர் மாலைகள் அணிவித்து தீபாராதனை நடந்தது. மணவாளநல்லுõர் கொளஞ்சியப்பர் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.