ஜம்மு: ஜம்முவிலுள்ள பகவதிநகர் முகாமிலிருந்து, 5வது குழு அமர்நாத் குகைக்கோயில் யாத்திரையை துவக்கியுள்ளது. இக்குழுவில் 1554 ஆண்கள், 488 பெண்கள், 27 குழந்தைகள் என மொத்தம் 2069 யாத்ரீகர்கள் இடம் பெற்றுள்ளனர். இதுவரை 8940 பேர் குகைக்கோவிலுக்கு சென்றுள்ளனர்.