சிறுபாக்கம்: வி.புதுõர் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம், அலகு அணிந்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சிறுபாக்கம் அடுத்த வி.புதுõர் மாரியம்மன் கோவிலில், நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. காலை 10:00 மணிக்கு பக்தர்கள் பால்குடம் சுமந்து, அலகு அணிந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டனர். மாலை 6:00 மணியளவில், மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.