நெல்லிக்குப்பம்: பில்லாலி திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. இக்கோவிலில் கடந்த மாதம் 26ம் தேதி கொடியே ற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்கியது. தினமும் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலாவும் நடந்து வருகிறது. கடந்த 2ம் @ததி வில் வளைத்தலும், அர்ச்சுனன் திரவுபதி திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. 3ம் தேதி மாலை தீ மிதி விழாவும், மறுநாள் 4ம் தேதி மஞ்சள் நீர் உற்சவமும், @நற்று 5ம் தேதி தர்மர் பட்டாபிஷேகமும் நடந்தது.