பனைக்குளம்:அழகன்குளம் பாவடித்தெரு, சிவகாமி சமேத நடராஜர் கோயிலில் குருப்பெயர்ச்சி யாகம் நடந்தது. சிவாச்சாரியார்கள் ஜோதிர் மகாலிங்கம், ரெத்தின சுப்பிரமணிய சிவம், பஞ்சவர்ண சிவம் ஆகியோர் நேற்று மாலை 4:25 மணியில் இருந்து இரவு 7:15 வரை குருப்பெயர்ச்சிக்கான வேதபாராயண மந்திரங்கள் முழங்கினர். கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு குருப்பெயர்ச்சி ஆவதால், நட்சத்திர பலன்தாரர்கள் சங்கல்ப பூஜை செய்தனர். பூஜகர் கிருஷ்ணசுவாமி மற்றும் கோயில் நிர்வாகிகள் உடனிருந்தனர்.