மண்டபம்: மண்டபம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆற்றாங்கரை உஜ்ஜைனி மகா காளியம்மன் கோயிலில் மாங்கல்ய பூஜை நடந்தது. இதையெ õட்டி,மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அழகிய நாயகி மகளிர் மன்ற தலைவி பிரேமா ரத்தினம் தலைமையில் ஏராளமான பெண்கள் லலிதா சகஸ்ரநாம குங்கும அர்ச்சனைகள் செய்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி காளியம்மாள் செய்திருந்தார்.