திருவாரூர்: ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குரு பரிகார ராசிக்காரர்களுக்கு லட்சார்ச்சனை நாளை துவங்கி 15ம் தேதி வரை நடக்கிறது.குரு பகவான் கடந்த 5ம் தேதி இரவு 11:02 மணிக்கு கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பிரவேசித்தார். இதையொட்டி திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. அதன்பின் நடந்த லட்சார்ச்சனையில் ரிஷபம் மிதுனம் சிம்மம் கன்னி விருச்சிகம் மகரம் மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பங்கேற்றனர்.குரு பெயர்ச்சிக்குப் பிந்தைய லட்சார்ச்சனை நாளை 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை காலை 9:00 மணிக்கு துவங்கி பகல் 12:00 மணி வரை மாலை 4:30 மணியில் இருந்து இரவு 8:00 மணி வரை நடக்கிறது. இதில் பரிகார ராசிக்காரர்கள் பங்கேற்கலாம் எனகோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.