பெருநாள் வருகிறதே! ஆடம்பரமாக ஆடை, அணிகலன் அணிய வேண்டுமே! பக்கத்து வீட்டார் உடைகள் எடுத்து விட்டார்களே! இறைவா! என்னை மட்டும் இவற்றையெல்லாம் வாங்க விடாமல் ஏழையாகப் படைத்து விட்டாயே” இப்படி எண்ணிக் கொண்டிருப்பவரா நீங்கள்! இதுகுறித்து நபிகள் நாயகம் என்ன சொல்கிறார் தெரியுமா! “இஸ்லாத்தில் இணைந்து சொற்ப வருவாயில் நிம்மதியாக, திருப்தியாக வாழுகின்ற மனிதனை நான் வாழ்த்துகிறேன். அல்லாஹ் கொடுத்த சொற்ப வருவாயை ஒருவன் திருப்தியோடு ஏற்பானாயின், அவன் செய்த சொற்ப செயல்களையும் அல்லாஹ் திருப்தியோடு ஏற்றுக்கொள்கிறான்.
அல்லாஹ் ஒரு மனிதன் மீது விருப்பம் கொண்டால், அவனை பலவகையிலும் சோதனை செய்வான். அவன் அதனைச் சகித்துக்கொண்டு திருப்தியோடு வாழ்ந்தால் அல்லாஹ் அவனை உண்மையான முஸ்லிமாகத் தேர்ந்தெடுப்பான்,” என்கிறார். அல்லாஹ் கொடுத்ததைத் திருப்தியுடன் ஏற்றுக்கொண்டாலும், தீயகாரியங்களைச் செய்யாமல் இருந்தாலும் கியாமநாளில் நரகம் அவரது கண்ணில் தென்படாது. நமக்கு இறைவனால் என்ன தரப்பட்டிருக்கிறதோ, அதை முழுமனதுடன் ஏற்று, அதற்கேற்றாற் போல் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50 மணி நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.20 மணி.