Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அபிராமியின் 108 போற்றி! ஐயப்பன் 108 சரணங்கள்! ஐயப்பன் 108 சரணங்கள்!
முதல் பக்கம் » கருப்பசாமி புகழ் மாலை
அபிராமி அருள் பதிகம்
எழுத்தின் அளவு:
அபிராமி அருள் பதிகம்

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2015
03:07

1. கள்ளவாரணரே கரிமுகத்துக் கடவுளே உன்னையே
 உள்ளத்தில்வைத்து உயர்த்துகின்றேன் அன்னையைப்பாடிட
வெள்ளமென வார்த்தைகளைத் தந்திடுக முதற்கடவுளே
பிள்ளையாரே என்றும் உடனிருந்து காத்திடுக.

2. திருக்கடவூரின் தலைவியே சிவனின் மறுபாதியே
அருட்கடலே ஆனந்த வாழ்வுதரும் அன்னையே
உள்ளத்தில் இருப்பவளே உமையவளே உன்னையே
கள்ளமில்லாமல் வணங்கிட உன்னருளைத் தந்துவிடு.
 
3. கங்கையைச் சூடியவனின் இடப்பாகம் அமர்ந்த
மங்கையே மாணிக்கமே மாதுளம்பூவே அன்று
திங்களைக் காட்டிப் பட்டரைக் காத்தவளே
எங்களைக் காத்திட உன்னருளைத் தந்துவிடு.

4. தூண்டும் சுடர்போல என்வாழ்வில் வந்தவளே
தாண்டும் மனதை ஒருநிலைப் படுத்திவிடு
வேண்டும் வரமெனக்குத் தந்தவளே உன்னை
மீண்டும் புகழ்வதற்கு உன்னருளைத் தந்துவிடு.  

5. செய்தபாவம் தன்னைச் செயலிழக்கச் செய்திடுவாய்
உய்யவழி ஒன்று சொல்லிடுவாய் உலகநாயகியே
மெய்யே பேசவேண்டும் மென்மேலும் உயரவேண்டும்.
அய்யன் துணையுடன் உன்னருளைத் தந்துவிடு.

6. மறவாத மனமெனக்கு மனதாரத் தந்திடுவாய்
உறவாலே வாழ்வில் உயர்ந்திடச் செய்திடுவாய்
பிறவாத வரங்களைத் தாயே நீ வழங்கிடுவாய்
இறவாத புகழ்பாட உன்னருளைத்    தந்துவிடு.   

7. பன்னிரு மாதமும் உன்கோயிலில்ச தாபிஷேகம்
எண்ணிலா மணிவிழா ஏற்றமுடன் நடைபெறும்
கண்களை மூடினால்உ ன்திருமுகம் வந்துவிடும்
உன்மகனைக் காத்திட உன்னருளைத் தந்துவிடு.     

8. திருவருள் புரிகின்றதி ருக்கடையூர் அபிராமி
அருள்மிகு அமுதீசர் அருட்பாகம் அமர்ந்தவளே
பொருள்மிகு கவிதையும் போதிய ஞானமும் தர
இருகரம் கூப்பினேன் உன்னருளைத் தந்துவிடு.    

9. அமாவாசையை பவுர்ணமி  ஆக்கியவளேஅபிராமியே
அம்மாஎன் ஆசையை  அடக்கிட வழிகாட்டு
சும்மாஉன் கோயிலைச்   சுற்றிச்சுற்றி வந்தேன்
அம்மா என்றழைத்தேன் உன்னருளைத் தந்துவிடு

10. சங்கு சக்கரம் தாங்கியவனின் தங்கையே
பொங்கிடும் பக்தியில் உன்புகழ் பாடுகிறேன்
அங்கயற் கண்ணியே அகிலத்தைக் காத்திட
மங்கையற் திலகமே உன்னருளைத் தந்துவிடு.

11. அண்டமெல்லாம் காப்பவளே ஆத்தாளே அபிராமியே
விண்ணவரின் துயர்களைய அமுதத்தைத் தந்தவளே
விண்ணதிர உன்புகழைப் பல்லாண்டு பாடிவர
கண்ணன் எனக்கு உன்னருளைத் தந்துவிடு 

 
மேலும் கருப்பசாமி புகழ் மாலை »
temple news
மங்கலத்து நாயகனே மண்ணாளும் முதலிறைவா!பொங்குதன வயிற்றோனே பொற்புடைய ரத்தினமேசங்கரனார் தருமதலாய் ... மேலும்
 
temple news
காப்புகார்மேவு சோலையெலாம் சூழும் ஊரன்கழனியெல்லாம் கொஞ்சுதமிழ் பாடும் வீரன்பார்மேவு வடிவுடையாள் ... மேலும்
 
temple news
திருக்குளமோ பாதாளம் தொட்டு நிற்கத்திகழ்கின்ற கோபுரமோ வானம் முட்டஅருக்கனவன் ஒளிபோலக்கோடிப் ... மேலும்
 
temple news
வயலோரம் புரள்கின்ற கயல்கள் எல்லாம்வடிவுடையாள் கயல் விழியின் வடிவம் காட்டஅயல்நிற்கும் தென்னையெலாம் ... மேலும்
 
temple news
விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடும் தமறுகங்கைதரித்ததோர் கோல கலா பைரவனாகி வேழம் உரித்துஉமை அஞ்சக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar