Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! ஆதிபுத்திரகொண்ட அய்யனார் கோயிலில் முப்பழ திருவிழா! ஆதிபுத்திரகொண்ட அய்யனார் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லையப்பர் கோயிலில் வளைகாப்பு விழா கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:
நெல்லையப்பர் கோயிலில் வளைகாப்பு விழா கொடியேற்றம்!

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2015
05:07

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. காந்திமதியம்பாள் உடனுறை நெல்லையப்பர் கோயிலில் ஆண்டு முழுவதும் அனைத்து மாதங்களிலும் 1முக்கிய திருவிழாக்கள் நடக்கின்றன. ஆனித்தேரோட்டம் அண்மையில் விமரிசையாக நடந்தது. ஆடி மாதம் வரும் ஜூலை 17ல் துவங்குகிறது. ஆண்டுதோறும் ஆடிப்பூர திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான ஆடிப்பூர திருநாள் கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கொடிமரம் மற்றும் கும்பத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடந்தது. கொடியேற்றத்தின்போது திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 4ம் திருநாளில் வரும் 14ம் தேதியன்று நண்பகல் 12 மணிக்கு அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு காந்திமதிஅம்பாள் சன்னதியில் இருந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்பாள் வீதியுலா நடக்கிறது. மொத்தம் பத்து நாட்கள் நடக்கும் இவ்விழாவில் நிறைவு விழாவில், ஆடிப்பூரம் 10ம் திருநாள் 20ம் தேதி இரவு ஊஞ்சல் மண்டபத்தில் இரவு 7 மணி முதல் 9 மணி வரை ஆடிப்பூரம் முளைக்கட்டு திருநாளும், சீமந்தம் நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று காலை தீர்த்தவாரியும், இரவு 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகளும் நடக்கிறது.ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவில்சித்திரை விழா கடந்த 15ம் முதல் நடந்து ... மேலும்
 
temple news
அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. வில்லியனுார் அடுத்த ... மேலும்
 
temple news
கோவை; ராம் நகர், கோதண்டராம சுவாமி கோவிலில் மகா ருத்ர யக்யம் நடந்தது. இதன் முதல் நிகழ்வாக காலை 6 மணிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar