பதிவு செய்த நாள்
14
ஜூலை
2015
12:07
எல்லோரிடமும் நட்புடன் பழகும் மேஷ ராசி அன்பர்களே!
குரு,ராகு இருவரும் முன்னேற்றத்தைக் கொடுப்பர். சுக்கிரன் ஜூலை 18-ந் தேதி வக்ரம் அடைந்தாலும், சிம்ம ராசியிலேயே இருப்பதால் நற்பலன் தருவார். உங்கள் ராசிக்கு 3ல் இருக்கும் செவ்வாய் ஜூலை 31 வரை வாழ்வை மேம்படுத்துவார். புதிய முயற்சி அனைத்திலும் வெற்றி காணலாம். பொருளாதார வளம் மேம்படும். புதன் ஆக. 1ல் கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு மாறுகிறார். அவரால் அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். தொழிலில் லாபம் அதிகரிக்கும். குருவின் பலத்தால் சுபநிகழ்ச்சி நடந்தேறும். ஆக. 2,3ல் உறவினர்கள் வருகையால் நன்மை கிடைக்கும்.
தொழில், வியாபாரத்தில் உழைப்புக்கேற்ப வருமானம் கிடைக்கும். ஆக.1 க்கு பிறகு தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். எதிர்பாராத விதத்தில் வருமானம் கிடைக்கும்.
பணியாளர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கலைஞர்கள் நல்ல நிலையில் இருப்பர். புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.
அரசியல் வாதிகள் சிறப்பான வளர்ச்சி காண்பர். எதிர்பார்த்த புதிய பதவி கிடைக்கும்.
மாணவர்கள் ஆர்வமுடன் படிப்பர். போட்டிகளில் வெற்றி காணலாம்.
விவசாயம் விளைச்சல் நன்றாக இருக்கும். கருப்பு நிற தானியத்தின் மூலம் லாபம் உண்டாகும். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய சொத்து ஜூலை 31க்குள் வாங்கலாம்.
பெண்கள் மாத பிற்பகுதியில் பிரச்னையைச் சந்திக்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து உதவி கிடைக்க வாய்ப்புண்டு.
நல்ல நாள்: ஜூலை 24, 25, 31, ஆக. 1, 2, 3, 6, 7, 10, 11, 12
கவன நாள்: ஜூலை 26, 27, 28 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண் : 1, 3 நிறம்: மஞ்சள், நீலம்
பரிகாரம்: தினமும் சூரிய தரிசனம் செய்யுங்கள். கிருஷ்ணரை வழிபட்டால் மேன்மை உண்டாகும். ஜூலை 31க்குப் பிறகு முருகன் கோவிலுக்கும் செல்லுங்கள்.