பதிவு செய்த நாள்
14
ஜூலை
2015
12:07
சாதுர்ய குணத்துடன் செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே!
சூரியன், சுக்கிரன் மாதம் முழுவதும் நன்மை செய்வர். 11 -ல் உள்ள கேது தொடர்ந்து நற்பலன் அளிப்பார். தற்போது சாதகமற்று இருக்கும் செவ்வாய் ஜூலை 31க்குப் பிறகு 3-ம் இடமான கடகத்திற்கு சென்று முன்னேற்றத்தைக் கொடுப்பார். புதன் ஆக.1ல் சிம்மத்திற்கு மாறுகிறார். இவரால் பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சூரியனால் தொழிலில் லாபம் சிறப்பாக இருக்கும். உடல் நலம் சிறப்படையும். ஆக.1 வரை புதனால் பகைவரால் இடையூறு வரலாம். குடும்பத்தில் தேவையான வசதி கிடைக்கும். கணவன்- மனைவி இடையே அன்பு பெருகும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும். பெண்கள் உதவிகரமாக இருப்பர்.
தொழில், வியாபாரத்தில் அரசு வகையில் பிரச்னையைச் சந்தித்தாலும், ஜூலை31க்கு பிறகு மறையும்.
பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். கோரிக்கை விடாமுயற்சியின் பேரில் நிறைவேறும். மாத முற்பகுதியில் அரசு ஊழியர்கள் வேலையில் கவனமுடன் இருப்பது நல்லது.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அதே நேரம் எதிர்பார்த்த புகழ் கிடைப்பதில் தடை உருவாகலாம்.
அரசியல்வாதிகள் சீரான பலனைக் காண்பர்.
விவசாயிகள் பழ வகைகள், பயறு வகைகள், எள், கரும்பு போன்ற பயிர்கள் மூலம் நல்ல வருமானம் காணலாம்.
மாணவர்களுக்குச் சுமாரான நிலையே தொடர்கிறது. தற்போது புதனும் சாதகமாக இல்லாததால் போட்டிகளில் வெற்றி காண்பது அரிது. ஆக. 1ல் இருந்து முன்னேற்றம் ஏற்படும்.
பெண்கள் குதுõகலமாக இருப்பர். கணவரின் அன்பு கிடைக்கும். ஆடை, அணிகலன்கள் கிடைக்கப் பெறலாம்.
நல்ல நாள்: ஜூலை 17, 18, 26, 27, 28, ஆக. 2, 3, 4, 5, 8, 9, 13, 14
கவன நாள்: ஜூலை 29, 30 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 7,9 நிறம்: செந்துõரம், வெள்ளை
பரிகாரம்: ராகுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். நவக்கிரகங்களை வழிபடுங்கள். லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.