பதிவு செய்த நாள்
14
ஜூலை
2015
12:07
விடாமுயற்சியால் வெற்றி பெறும் சிம்ம ராசி அன்பர்களே!
சுக்கிரன் மாதம் முழுவதும் நன்மை தர காத்திருக்கிறார். செவ்வாய் ஜூலை 31 வரை நற்பலன் தருவார். புதன் ஆக. 1ல் கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு மாறினாலும் நன்மை தர இயலாது. சூரியன்,கேது, குரு,சனி,ராகு நன்மை தர வாய்ப்பில்லை. சுக்கிரனால் பொருளாதார வளம் சிறக்கும். பொன், பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். செவ்வாயால் ஜூலை 31 வரை செயலில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். அதன் பிறகு பொருள் விரயம் ஏற்படலாம். குடும்பம் வளர்ச்சிக்கு பெண்களின் ஆதரவு துணை நிற்கும்.
தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும்.
பணியாளர்கள் அவ்வப்போது பணியில் பிடிப்பு நிலை இல்லாத நிலைக்கு ஆளாவர். வீண் அலைச்சலும் இருக்கும். அரசு பணியாளர்கள் சிறப்பான நிலை பெறுவர். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.
கலைஞர்கள் பின்தங்கிய நிலையில் இருந்து விடுபடுவர். எதிர்பார்த்த புகழ் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் சுமாரான நிலையில் இருப்பர். எதிர்பார்த்த பதவி கிடைக்காமல் போகலாம்.
மாணவர்கள் தொடர்ந்து கஷ்டப்பட்டு படிக்க வேண்டியதிருக்கும். ஆனால், முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு சீரான மகசூல் கிடைக்கும். பழவகைகள், கீரை வகைகளில் லாபம்
அதிகரிக்கும். கால்நடைகள் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வழக்கு விவகாரத்தில்
மெத்தனம் கூடாது.
பெண்கள் குடும்பத்தினரால் மதிக்கப்படுவர். கணவரின் அன்பு கிடைக்கும். புண்ணிய தலங்களுக்கு சென்று மகிழ்வர். தாய் வீட்டில் இருந்து சீதனம் கிடைக்கும். ஆக. 1க்கு பிறகு குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போகவும்.
நல்ல நாள்: ஜூலை 19, 20, 24, 25, ஆக. 2, 3, 8, 9, 10, 11, 12, 15, 16, 17
கவன நாள்: ஆக.4, 5 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 4, 8 நிறம்: சிவப்பு,வெள்ளை
பரிகாரம்: ராகு கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள். ஜூலை 31க்கு பிறகு முருகன், வீரபத்திரருக்கு தீபமேற்றி வழிபடுங்கள்.