பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் சாட்டையால் அடித்துக் கொள்ளும் நேர்த்திக்கடன் உண்டு. ஆவேசம் வந்து சாட்டையால் அடித்துக் கொண்டு ஆடுபவர்களை கோமரம் என்று அழைக்கிறார்கள். மேலும், அக்னிசட்டியைக் கையில் ஏந்தி மார்போடு அணைத்துக் கொண்டு மாரியம்மா! தாயே! மாரியம்மா! என்று முழக்கமிட்டபடியே கோவிலை வலம் வருவர். இந்த பிரார்த்தனைக்கு பூவோடு என்று பெயர். எக்காரணம் கொண்டு பூவோட்டை கீழே வைக்கக்கூடாது என்ற விதியையும் பக்தர்கள் பின்பற்றுகிறார்கள்.