பெண்ணாடம்: சவுந்திரசோழபுரம் மாரியம்மனுக்கு ஏராளமானோர் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பெண்ணாடம் அடுத்த சவுந்திரசோழபுரம் மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா, கடந்த 16ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினசரி காலை, மாலை அம்மனுக்கு சிறப்பு அபி ஷேக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் தீமிதி உற்சவத்தில், ஏராளமானோர் தீமிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று மஞ்சள் நீர் உற்சவத்துடன் விழா நிறைவடைந்தது.