திருப்பதி பத்மாவதி கோவிலில் அன்னதான நேரம் மாற்றம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூலை 2015 05:07
திருப்பதி: திருமலை திருப்பதி கோவில் நிர்வாகத்திற்கு உள்பட்டது திருப்பதி பத்மாவதி தாயார் கோவில். திருமலை பெருமாளை தரிசிக்கும் பக்தர்கள் அனைவருமே பத்மாவதி தாயாரை தரிசித்துவிடுவர்.இதனால் மலை மீதுள்ள அதே கூட்டம் பத்மாவதி கோவிலிலும் திரண்டு இருக்கும்.இந்த நிலையில் திருமலை கோவில் உயரதிகாரிகள் பத்மாவதி கோவிலில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் முடிவில் நிறைய பக்தர்கள் குங்குமார்ச்சனை செய்வதற்கு சிரமப்படுவதை உணர்ந்து அதை எளிதாக்கும் வகையில் வழிகாட்டும் பலகைகள் வைக்க ஏற்பாடு செய்தனர் அதே போல அன்னதானத்திற்காக பக்தர்களை நீண்ட நேரம் காக்கவைக்காமல் காலை 10.30 மணிக்கும் கூட்டம் அதிகமாக இருந்தால் காலை 10 மணிக்கும் அன்னதானத்தை வழங்கவும் உத்திரவிட்டுள்ளனர்.