கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோவிலில் லட்சார்ச்சனை பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூலை 2015 10:07
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோவிலில், மழை வேண்டி லட்சார்ச்சனை பூஜை நடந்தது.மழை வேண்டியும், விவசாயம் தழைக்கவும் கள்ளக்குறிச்சி முத்துமாரியம்மன் கோவிலில் ஏழு நாட்கள் நடக்கும் சிறப்பு பூஜைகள் நேற்று காலை துவங்கியது. அதிகாலை பசுவிற்கு பூஜைகள் செய்த பின், நித்திய பூஜைகள் துவங்கியது. மூலவர், உற்சவர் அம்மனுக்கு 54 வகையான அபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. மூலவர் மாரியம்மனுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி சிவன் கோவில் குருக்கள் அம்பிகேஸ்வரன் தலைமையிலான சிவாச்சாரியார்கள், குங்குமத்தால் லட்சார்ச்சனை செய்தனர். ஆயிரம் எண்ணிகை கொண்ட, லலிதா சகஸ்ரநாம மந்திரங்களை 10 முறை வாசித்து அர்ச்சனை செய்தனர். இன்று (28ம் தேதி) 108 சங்காபிஷேகம், நாளை 108 பால்குடம் அபிஷேகமும் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் நற்குணம் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.