வத்திராயிருப்பு சேதுநாராயணப் பெருமாள் பிரம்மோற்ஸவ விழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூலை 2015 11:07
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு பகுதியில் பிரசித்தி பெற்ற சேதுநாராயணப் பெருமாள் கோயில் பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது. இங்கு ஊரின் மத்தியல் அமைந்துள்ள இக்கோயிலில் இவ்விழா பாரம்பரியத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஏழு நாட்கள் வடைபெறும் இவ்விழாவில் பெருமாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருள்வார். அத்துடன் ஏழு அவதாரங்களுடன் வீதியுலா செல்வார். கோயில் மைய மண்டபத்தில் தினமும் ஆன்மிக சொற்பொழிவும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும். இந் தாண்டுவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து சேதுநாராயணப் பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கும் 18 வகையான அபிஷேகமும், திவ்யநாம வழிபாடும் நடந்தது. முதல்நாள் மாலையில் சேஷ வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார். இரண்டாம் நாளில் அனுமந்த வாகனத்தில் ராம அவதாரத்தில் எழுந்தருளினார். நாமாவாளி பஜனையை தொடர்ந்து வீதியுலா சென்றார். மீண்டும் கோயில் திரும்பிய பெருமாளை பக்தர்கள் எதிர்சேவை செய்து வழிபட்டனர். ராஜாராம் ஆன்மிக சொற்பொழிவும், பஜனை வழிபாடும் நடந்தது.