பதிவு செய்த நாள்
29
ஜூலை
2015
11:07
திருப்பூர்: திருப்பூரின் காவல் தெய்வமான செல்லாண்டியம்மன் கோவில் ஆடி குண்டம் திருவிழா, 15ல் துவங்கியது. நேற்று முன்தினம் காலை, சிறப்பு அபிஷேகம் மற்றும் குண்டம் திறப்பு நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, திருக்கல்யாணம்; 9:00க்கு, குண்டத்துக்கு அக்னி இடும் நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று காலை, 7:00க்கு, குண்டம் இறங்குதல் துவங்கியது. பூசாரி, அருளாளர்கள் முதலில் குண்டம் இறங்கினர். தொடர்ந்து, 200 பெண்கள் உட்பட, 300 பேர், "ஓம் செல்லி, மகா செல்லி என்ற கோஷத்துடன், குண்டம் இறங்கி, அம்மனை வழிபட்டனர். பின், எருமை கிடா வெட்டி, புதைத்து குண்டம் மூடப்பட்டது. மூலவருக்கு, 100 லிட்டர் பால், 50 லிட்டர் தயிர், 500 இளநீர், 5 கிலோ மஞ்சள், 5 கிலோ திருமஞ்சனம், 5 லிட்டர் பன்னீரில், சிறப்பு அக்னி அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, அம்மன் வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து வந்தும், அம்மனை வழிபட்டனர். இன்று, சிறப்பு அபிஷேகம், மஞ்சள் நீராட்டு விழா, அம்மனுக்கு மகாலட்சுமி அலங்காரம் நடக்கிறது.