பதிவு செய்த நாள்
29
ஜூலை
2015
11:07
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர் மாரியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழாவில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரோட்டம் நடந்தது. திருக்கோவிலூர், கீழையூர் மாரியம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா, கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று தேரோட்டம் நடந்தது. காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. பகல் 12:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அம்மன் எழுந்தருளி வீதியுலா துவங்கியது. முக்கிய வீதிகள் வழியாக சென்று மாலை 4:00 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர்கள் ராஜேந்திரன், ஜெயபால், ரகு, தட்சிணாமூர்த்தி, சக்திவேல் மற்றும் சம்பத் உள்ளிட்ட பக்தர்கள் செய்திருந்தனர்.