பதிவு செய்த நாள்
30
ஜூலை
2015
12:07
வேலுார்: திருவண்ணாமலையில் இன்று பவுர்ணமி கிரிவலம், எப்போது செல்லலாம் என்று அண்ணாமலை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று சுவாமி கும்பிட்டு விட்டு, அங்கு 14 கி.மீ., சுற்றளவு கொண்ட அண்ணாமலையை கிரிவலம் சென்றால், நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். எனவே, ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில், திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள், அண்ணாமலையாரை தரிசனம் செய்து விட்டு, கிரிவலம் செல்கிறார்கள் அதன்படி, இன்று ஜூலை 30ம் தேதி (வியாழக்கிழமை) இரவு 7:02 மணிக்கு தொடங்கி, நாளை 31ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5:50 மணி வரை, பக்தர்கள் கிரிவலம் செல்ல உகந்த நேரமாகும் என்று, அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.