கீழக்கரை: பெரியபட்டினம் ஆதிமுத்து மாரியம்மன் கோயிலில் 92வது ஆண்டு முளைக்கொட்டு விழா நடந்தது. இதை யொட்டி மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். பெண்கள் பொங்கலிட்டனர். பால்குடம், கரகம், தீச்சட்டியுடன் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. அழகு நாச்சியம்மன் கோயில் ஊரணியில் கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. பூஜகர் பரமேஸ்வரன், உதயசந்திரன், இந்துமகாசபையினர் ஏற்பாடுகளை செய்தனர்.குத்துக்கல் வலசை: காந்தாரி அம்மன் கோயிலில் நடந்த முளைக்கொட்டு விழாவில் பக்தர்கள் கரகம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம் நடந்தது. பூஜாரி பொன்னுச்சாமி, முத்தரையர் சங்கத்தினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.