பதிவு செய்த நாள்
30
ஜூலை
2015
12:07
உடுமலை : பிரதோஷம் முன்னிட்டு, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில், நேற்று சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. உடுமலை, முத்தையா பிள்ளை லே-அவுட், சக்தி விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள சோழீஸ்வரர் சன்னதியில், நேற்று மாலை, 4:00 மணிக்கு, சோழீஸ்வரருக்கும், நந்தியம்பகவானுக்கும், அபிேஷகம், அலங்காரம் நடந்தது. பிரதோஷ மூர்த்தி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, கோவில் பிரகாரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள, சிவன் சன்னதியில், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டது.
பெதப்பம்பட்டி ரோடு, ஏரிப்பாளையத்தில் உள்ள சித்தாண்டீஸ்வரர் கோவிலில், சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை நடந்தது.எலையமுத்துார் பிரிவில் உள்ள புவன கணபதி கோவிலில் உள்ள, சிவன் சன்னதி, ருத்ரப்பா நகரில் உள்ள பஞ்சமுக லிங்கேஸ்வரர் கோவில், தில்லை நகர் ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில், ரத்தின லிங்கேஸ்வரருக்கு மாலை, 4:30 மணிக்கு, பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களில், அபிேஷகம், பூஜை நடந்தது. மடத்துக்குளம், கடத்துாரில், அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அர்ச்சுனேசுவரர் கோவிலில், பிரதோஷம் முன்னிட்டு, நேற்று மாலை, 4:30 மணிக்கு, சிறப்பு பூஜை நடந்தது. குறிச்சிக்கோட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள, சிவலிங்கேஸ்வரர் சன்னதியில், சுவாமிக்கு நேற்று மாலை, 4:30 மணிக்கு, சிறப்பு அபிேஷகத்தை தொடர்ந்து, அலங்கார பூஜை நடந்தது.கொழுமத்தில் உள்ள தாண்டேஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில்களில், நேற்று மாலை, சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் இடம்பெற்றன.