சதுரகிரி கோயில் ஆடி அமாவாசை: ஆக.8 -18 வரை பக்தர்களுக்கு அனுமதி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2015 11:07
உசிலம்பட்டி: ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆக., 8 முதல் 18 வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.சமீபத்தில் இக்கோயிலுக்கு வந்த பக்தர்களில் சிலர் மழை வெள்ளத்தில் சிக்கி இறந்தனர். இதனால் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் மட்டும் பக்தர்களை வனத்துறை அனுமதிக்கிறது.ஆக.,14ல் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருவர். மலையில் அவர்களை அனுமதிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் உசிலம்பட்டியில் ஆர்.டி.ஓ., பாலசுப்ரமணியன் தலைமையில் நடந்தது.ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆக.,12ல் பிரதோஷ வழிபாடு, ஆக.,13ல் சிவராத்திரி சிறப்பு பூஜை, ஆக.,14 காலை 6 மணிக்கு 18 வகை அபிஷேகம் நடக்கிறது. ஆக., 8 முதல் 18 வரை (காலை 6 முதல் மாலை 4 மணி) மலைப்பகுதியில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.வன விலங்கு, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பாலிதீன் பைகள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.