திருக்கனுார்: திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில், பவுர்ணமியை முன்னிட்டு, ஜோதி தரிசனம் நேற்று நடந்தது.ஆடி பவுர்ணமியையொட்டி, காலை 9:00 மணிக்கு, வக்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு, சந்தன காப்பு அலங்காரம், சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது.முக்கிய நிகழ்வாக, நள்ளிரவு 12:00 மணிக்கு, கோவில் கோபுரத்தில் ஜோதி தரிசன நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.