ஆடிப்பெருக்கு பூஜையை நதிக்கரை மட்டுமில்லாமல் வீட்டிலும் எளிய முறையில் செய்யலாம். நிறை குடத்தில் இருந்து ஒரு செம்பில் தண்ணீர் எடுத்து, அதில் அரைத்த மஞ்சளை சிறிதளவு சேர்க்க வேண்டும். அந்த தீர்த்தத்தை திருவிளக்கின் முன் வைக்க வேண்டும். உதிரிப்பூக்களால் அம்மனுக்குரிய போற்றி அர்ச்சனையைச் சொல்லி வணங்க வேண்டும். கற்பூர ஆரத்தி செய்து கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை,தாமிரபரணி உள்ளிட்ட புண்ணிய நதிகள், அகத்தியர் ஆகியோரை மனதார நினைத்து வணங்க வேண்டும். சர்க்கரை பொங்கலை படைத்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும். செம்பிலுள்ள நீரை கால் மிதி படாத இடத்தில் ஊற்ற வேண்டும். இந்த பூஜை செய்யவீட்டில் வளம் சேரும்.