கண்ணுடையநாயகி அம்மன் கோயிலில் தங்க கிண்ண முளைப்பாரி உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2015 11:08
சிவகங்கை: நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் ஆடி விழாவை முன்னிட்டு அம்மன் தங்க கிண்ணத்தில் முளைப்பாரி ஏந்தி வீதி உலா வந்தார். சிவகங்கை தேவஸ்தானத்திற்குட்பட்ட இக்கோயிலில் ஜூலை 23ம் தேதி காப்பு கட்டுதலுடன் ஆடி முளைக்கொட்டு விழா துவங்கியது. தினமும் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் வீதி உலா வந்தார். ஒன்பதாம் நாளான நேற்று காலை 10:30 மணிக்கு சிறப்பு யாகசாலை பூஜை நடந்தது. தங்க கிண்ண முளைப் பாரி அலங்காரத்தில் அம்மன் காட்சி அளித்தார். பெண்கள் முளைப்பாரியை சுற்றி கும்மி பாடல் பாடினர். காலை 11:15 மணிக்கு பல்லக்கில் அம்மன் எழுந்தருளி, தேரோடும் வீதிகளை சுற்றி வந்தார். பெண்களும் முளைப்பாரி ஏந்தி ஊர்வலம் சென்றனர். பல்லக்கு பகல் 12:30 மணிக்கு கோயில் வந்தடைந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. ஆடி வெள்ளியை முன்னிட்டு ஏராளமான பெண்கள் மாவிளக்கு, நெய்விளக்கேற்றி நேர்த்தி செலுத்தினர். பத்தாம் நாளான இன்று இரவு 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும். சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் கணபதிராம் ஏற்பாட்டை செய்தனர்.