பதிவு செய்த நாள்
01
ஆக
2015
11:08
திருப்பதி: திருமலையில் உள்ள, ஸ்ரீவாரி திருக்குளம், இந்த மாதம் முழுவதும் மூடப்பட்டிருக்கும் என, திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி திருமலையில், செப்., 16 முதல், 24ம் தேதி வரை, வருடாந்திர பிரம்மோற்சவம்; அக்., 14 முதல், 22ம் தேதி வரை, நவராத்திரி பிரம்மோற்சவம் என, இரு பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. அதற்கு முன், திருமலையில் உள்ள, திருக்குளத்தை சுத்தம் செய்து, புதிய நீர் நிரப்பும் பணி நடைபெற உள்ளது.அதற்காக, இன்று முதல் வரும், 31ம் தேதி வரை, திருக்குளம் மூடப்படும். இந்த நாட்களில், திருக்குளத்திற்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், மாலை நேரத்தில், திருக்குளத்தில் நடைபெறும் ஆரத்தியும் ரத்து செய்யப்பட்டுஉள்ளது என, தேவஸ்தானம் அறிவித்துஉள்ளது.